இந்துத்துவா அமைப்புகளிடையே உச்ச மோதல்: 'ஆர்.எஸ்.எஸ்.' துரோகங்களை அம்பலப்படுத்தும் இந்துமகா சபை!!
மீரட்: இந்துத்துவா அமைப்புகளிடையே கடுமையான குடுமிபிடி சண்டை வெடித்துள்ளது. காந்தி படுகொலையைத் தொடர்ந்து தாய் அமைப்பான தங்களை காட்டிக் கொடுத்து நேருவுடன் கை கோர்த்துக் கொண்ட பச்சை துரோக இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்று இந்து மகாசபை சாடியுள்ளது.
மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் நவம்பர் 15. இந்நாளை வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடித்தது இந்து மகா சபை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் எம்.எஸ். வைத்யா, கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக எந்த அமைப்பு கொண்டாடுகிறது என எனக்கு தெரியாது. கோட்சேவுக்கு மரியாதை செலுத்துவது, கவுரவப்படுத்துவதை நான் எதிர்க்கிறேன். கோட்சே ஒரு கொலையாளி என்று கூறியிருந்தார்.
இதற்கு இந்து மகாசபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்துக்கு இந்து மகா சபையின் தேசிய துணைத் தலைவர் அசோக் சர்மா அளித்துள்ள பதில்:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நாட்டை மட்டுமல்ல இந்துக்களையும் காட்டிக் கொடுத்த துரோகிகள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தாய் அமைப்பே இந்து மகாசபை என்பதை சிலராவது அறிந்திருப்பார்கள்.
ஆனால் 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், இந்து மகாசபையுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டனர். அவர்கள் நேருவுடன் கை கோர்த்துக் கொண்டு காந்தி கொலை விவகாரத்தில் இருந்து விலகி நின்றனர். காந்தி கொலை சம்பவத்தின் போது இந்து மகாசபையினர் சித்ரவதைகளுக்கு ஆளானார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் இந்து மகாசபையை விட்டு ஓடிய துரோகிகள்.
இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாரதிய ஜனதாவை முன்வைத்து ஆட்சி அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. இந்துக்களின் கவுரவத்தைக் காப்பாற்ற எந்த ஒரு நடவடிக்கையையும் அது மேற்கொள்ளவில்லை.
எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட அதன் கிளை அமைப்புகள் எதனுடனும் தொடர்பு இல்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உண்மை முகத்தை, இந்துக்களின் உணர்ச்சிகளை எப்படியெல்லாம் தூண்டிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது என்பதை அம்பலப்படுத்துகிற காலம் வெகுதொலைவில் இல்லை.
ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் பா.ஜ.க.வும் வாக்குகளை அறுவடைய செய்ய மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்கின்றன. இந்து மகாசபை தொடக்கத்தில் முன்வைத்த அத்தனை பிரச்சனைகளையும் தன்னுடையதாக காட்டிக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ்.
1949ஆம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி பாபர் மசூதியில் ராமர் சிலையை வைத்தது இந்து மகாசபைதான். போலீசார் அறிக்கையிலும் கூட இந்து மகாசபையே அந்த சிலையை வைத்ததாக பதிவு இருக்கிறது. இந்த ஜனசங்கமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் பாரதிய ஜனதாவும் அப்போது எங்கே இருந்தன?
இவ்வாறு அசோக் சர்மா கூறியுள்ளார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications