நண்பருடன் படுக்கையை பகிர சொல்லி கொடுமைப்படுத்திய கணவன்.. திருமணமான ஏழே மாதங்களில் ஆசிரியை தற்கொலை
அசோக் அவரது நண்பருடன் மனைவியை உடலுறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதாகவும், மனைவி மறுத்ததால், அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து அசோக் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

பெங்களூர்: தனது நண்பனுக்கு மனைவியை விருந்தாக கூறி வற்புறுத்தி மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் அசோக். இவருக்கும் சுப்ரியா என்ற 24 வயது பெண்ணுக்கும் நடுவே 7 மாதங்கள் முன்பு திருமணமாகியது. சுப்ரியா அருகேயுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த சுப்ரியா, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

மனைவியை பகிர துணிந்த காமுகன்
இதையறிந்த சுப்ரியாவின் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்ரியா உயிரிழந்தார். இதையடுத்து மருமகன் அசோக் மீது சுப்ரியா தாய் அந்தோனம்மா புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகளை அசோக் அவரது நண்பருடன் உடலுறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதாகவும், சுப்ரியா மறுத்ததால், அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து அசோக் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

காதல் திருமணம்
இதுகுறித்து அந்தோனம்மா கூறுகையில், கேரளாவுக்கு தியான வகுப்பு ஒன்றுக்கு சென்றபோது சுப்ரியாவுடன், அசோக்கிற்கு பழக்கம் ஏற்பட்டது. அசோக்கை காதலிப்பதாக கூறி, எங்களையெல்லாம் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். ஆனால், அவரது முடிவு இவ்வளவு மோசமானதாக போய்விட்டது. அசோக் தன்னை கொடுமைப்படுத்தியதை சுப்ரியா எங்களிடம் கூறவில்லை.

புகாரில் முழு விவரம்
கமிஷனர் அலுவலகத்திலுள்ள, மகளிர் உதவி மையத்தில், எனது மகள், கணவன் பற்றி புகார் கொடுத்தார். அங்குள்ள நிபுணர்கள், இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுத்தனர். அங்கு, தான் சரியாக இருப்பதாக உறுதியளித்து திரும்பிய அசோக், மீண்டும், எனது மகளிடம் தகராறு செய்தார். புகார் கொடுத்ததை வைத்தே பிரச்சினையை கிளப்பியுள்ளார். எனது மகள் கொடுத்த புகார் காப்பியை நான் படித்து பார்க்க நேர்ந்தது. அதன்பிறகுதான் எனக்கு விவரம் தெரிந்தது. இவ்வாறு அன்தோனம்மா கூறினார்.

கணவன் கைது
அன்தோனம்மா புகாரை ஏற்றுக்கொண்டுள்ள கெங்கேரி போலீசார் வரதட்சணை கொடுமை மற்றும் பெண்ணை கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்ரியாவின் கணவர் அசோக்கை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications