கருவில் இருக்கும் சிசுவுக்கு “இதய அறுவை சிகிச்சை” – ஹைதராபாத் மருத்துவர்கள் சாதனை
ஹைதராபாத்: இந்தியாவில் முதல்முறையாக கருவில் இருக்கும் சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது இந்த புதிய முறை அறுவை சிகிச்சை.
இந்த அறுவைச் சிகிச்சை மூலம், சிரிஷா எனும் 25 வயது பெண்ணின் கருவில் இருந்த சிசுவின் இதய ரத்தகுழாய் அடைப்பு வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இடது பக்க ரத்தக் குழாய் பாதிப்பு:
சிசுவிற்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் நாகேஸ்வர ராவ் இது குறித்து தெரிவிக்கையில், "25 வார சிசுவின் இதயத்தின் இடது பக்க ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து:
அந்த ரத்தகுழாய் சுருங்க ஆரம்பித்திருந்ததால் குழந்தை பிறக்கும்போது இதயத்தின் இடது பக்கம் மிகவும் சிறியதாக இருந்திருக்கும்.
வால்வோட்டமி அறுவை சிகிச்சை:
அதனால், சிசுவிற்கு "ஃபோட்டல் ஆர்டல் வால்வோட்டமி" என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தோம்' எனத் தெரிவித்துள்ளார்.
12 மருத்துவ நிபுணர்கள்:
இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை 12 மருத்துவ நிபுணர்கள் செய்துள்ளனர்.
பலூன் மூலமாக சிகிச்சை:
சிசுவின் 27 வது வாரத்தில் தாய்க்கும், சிசுவிற்கும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்ட ஊசியின் உதவியோடு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பலூன் மற்றும் கம்பியை பயன்படுத்தி சிசுவின் இதயத்தில் இருந்த ரத்த குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டது.
60 சதவீதம் குறைப்பு:
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயின் கருப்பைக்குள் இருந்த சிசுவின் இதயத்தில் இருந்த 99 சதவீத அடைப்பு 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் ஆசிரியை:
சிரிஷா அறிவியல் ஆசிரியர் என்பதால், அவருக்கும் அவரது குழந்தைக்கும் என்ன நடக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது எனவும் அவர் கூறினார்.
இதயதுடிப்பு அதிகரிப்பு:
அறுவை சிகிச்சைக்குப்பின் சிசுவின் உடல்நிலை நலமாக இருப்பதாகவும், சிசுவின் எடை 830 கிராமிலிருந்து 1200 கிராமாக அதிகரித்துள்ளதாகவும், ரத்த கசிவின்றி இதய துடிப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications