பெங்களூரு கலவரத்தைக் காட்டக் கூடாது.. டிவி சானல்களுக்கு தடை போட்ட ஹைதராபாத் போலீஸ்
ஹைதராபாத்: கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் நடந்த மிக மோசமான கலவரம் தொடர்பான காட்சிகளை காட்ட வேண்டாம் என்று தெலுங்கு டிவி சானல்களுக்கு ஹைதராபாத் காவல்துறை தடை போட்ட விட்டது. இதுதொடர்பான எந்தக் காட்சியையும் காட்ட வேண்டாம் என்று டிவி சானல்களுக்கு மட்டுமல்லாமல் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் காவல்துறை அறிவுறுத்தலை வழங்கியிருந்தது.
இந்தக் காட்சிகள் மிக மோசமாக இருப்பதால் இது பதட்டத்தை உருவாக்கும் என்றும் தேவையில்லாத பிரச்சினைகள் எழலாம் என்பதாலும் இந்த தடை உத்தரவை ஹைதராபாத் போலீஸார் பிறப்பித்திருந்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டி கூறுகையில், பெங்களூரு வன்முறைக் காட்சிகளை காட்டக் கூடாது என்று டிவி சானல்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். பக்ரீத் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் வன்முறையைத் தூண்டும் வகையிலான காட்சிகளை காட்டுவதையும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையிலான செய்திகளை ஒளிபரப்புவதையும் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டோம் என்றார் ரெட்டி.












Click it and Unblock the Notifications