ரயில் பயணத்தின் போது குற்ற சம்பவமா?.. அழையுங்கள் 1512.. புதிய எண் அறிமுகம்...
Subscribe to Oneindia Tamil
டெல்லி : பயணிகள் ரயிலில் குற்றம் நிகழ்ந்தால் தகவல் தெரிவிக்க தொலைபேசி உதவி எண் 1512 என்ற எண் அறிமுகப்படுத்துப்பட்டது.
டில்லியில் நடந்த விழாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஹரிபாய் பார்திபார் சவுத்ரி கலந்து கொண்டு இந்த எண்ணை அறிமுகப்படுத்தினார்.

இந்த உதவி எண் நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரயில்களில் குற்றங்கள் ஏற்பட்டால் 1512 எண்ணுக்கு டயல் செய்து புகாரை பதிவு செய்யலாம்.
அவ்வாறு புகார் பதிவு செய்யும் போது அருகில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் பயணம் தடைபடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications