தண்ணீர் நீல நிறமாக மாறினால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்- டெல்லி புராரி சம்பவத்தில் பரபரப்பு
தண்ணீர் நீல நிறமாக மாறினால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்று டெல்லி புராரி சம்பவத்தில் எழுதப்பட்டிருந்தது.
Recommended Video

டெல்லி: தூக்கில் தொங்குவதற்கு முன் அனைவருக்கும் முன்பும் ஒரு கப் நீர் வைக்கப்பட வேண்டும். அது நீல நிறமாக மாறினால் நீங்கள் காப்பாற்றப்படுவீர் என்று டெல்லி புராரி சம்பவத்தில் எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இவர்களது மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வாரமாக நடந்து வரும் விசாரணையில் இதுவரை மரணத்துக்கான உறுதியான காரணம் தெரியாததால் போலீஸார் திணறி வருகின்றனர்.

தந்தையின் சொல்படி
அந்த வீட்டில் உள்ள மூதாட்டி நாராயண் தேவியின் மகன் லலித் பாட்டியா 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தை போல் சில செயல்களில் ஈடுபட்டார். திடீர் திடீர் என அவரது குரலில் பேசி அனைவரையும் வியக்க வைப்பார். இறைவனின் தீட்சயை பெற இதுபோல் செய்ய வேண்டும் என்று மற்ற உறுப்பினர்களுக்கு லலித்தான் கூறியுள்ளார்.

இந்தி பாடலுக்கு டான்ஸ்
இதுவரை 11 டைரிகள் கிடைத்துள்ளன. இவற்றில் உள்ள விஷயங்கள் லலித் பாட்டியா 11 ஆண்டுகளாக சொல்லி சொல்லி அதை மணப்பெண் பிரியங்கா எழுதியுள்ளார். இறப்பதற்கு முன்னர் பிரியங்காவின் திருமண நிச்சயதார்த்தத்தில் இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் ஆடிய டான்ஸை குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

நீல நிறம்
இறுதியாக கிடைக்கப்பெற்ற டைரியில் "ஒரு கப் தண்ணீர் வையுங்கள். அது நீல நிறமாக மாறும். அப்போது நான் தோன்றுவேன் உங்களை காப்பாற்றுவேன். பூஜை முடிந்த பிறகு கட்டுகளை அவரவர் அவிழ்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுதியிருந்தது.

நாராயணின் மகன்
இறப்பதற்கு முன்னர் வீட்டில் வளர்த்து வந்த நாயை நாராயணின் மகன் புவனேஷ் சிறிது நேரம் நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. 11 பேருக்கு இறுதி சடங்குகளை உறவினர் பிரியங்கா சுண்டாவாட் செய்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications