ஜாதி மாறி காதல்… உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கவுரவக்கொலை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாதிமாறி காதலித்த இளம்பெண் கவுரவக் கொலை செய்து புதைக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முஷாபர் நகர் மாவட்டத்தில் உள்ள பரோடா கிராமத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

In Muzaffarnagar, Girl Allegedly Killed, Buried by Father Over Affair

இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அப்பெண்ணுக்கும், குடும்பத்தினருக்கும்,காதல் விவகாரம் வாக்குவாதமாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர், அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் சடலத்தை புதைக்க முயன்றனர்.

இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ஹசன் மற்றும் சத்தார் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள அவரின் குடும்பத்தினர் 2 பேரை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த கவுரவக் கொலை சம்பவத்தால் அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+