சிக்கிம் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே மோதலால் டென்ஷன்
காங்டாக்: சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்புக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
Recommended Video
சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதி நாகு லா செக்டாரில் இந்தியா, சீனா வீரர்களிடையே எல்லை தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறியது.
இந்த மோதலில் 4 இந்திய வீரர்களுக்கும் 7 சீனா ராணுவ வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த மோதலின் போது இருதரப்பிலும் சுமார் 150 வீரர்கள் அப்பகுதியில் இருந்துள்ளனர்.
இப்பிரச்சனைக்கு இருதரப்பு ராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு காணப்பட்டது. ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
சீனா காட்டும் வேகம்.. ஆராய்ச்சியில் பெரிய வெற்றி.. கொரோனாவிற்கு விரைவில் தடுப்பூசி.. என்ன நடக்கும்?
இப்பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே பதற்றம் நீடித்து வரும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.