இந்திய எல்லையில் ஊடுருவும் முயற்சி முறியடிப்பு!! என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் பலி!!!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
குப்வாரா மாவட்டத்தில், சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே, தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ தயாராக இருப்பதாக, இந்திய ராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்த போது, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்தினரும் பதிலடியாக, துப்பாக்கியால் சுட்டனர்.
பல மணி நேரம் நீடித்த தாக்குதலின் முடிவில், மூன்று தீவிரவாதிகளையும் இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
கடந்த இரு வாரங்களில் மட்டும் மூன்று முறை, தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக, ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications