ஜம்மு-காஷ்மீரில் 99 நாட்களுக்கு பிறகு மீண்டும் நாளை முதல் ரயில் சேவைகள் ஆரம்பம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் 99 நாட்களுக்கு பின்னர் நாளை (நவம்பர் 12) முதல் மீண்டும் தொடங்குகிறது
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பேருந்து மற்றும் ரயில்சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது. மேலும் பலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது
இந்நிலையில் இயல்பு நிலை திரும்பிய பின்னர் மெல்லமெல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பின்னர் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டன. இணைசேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கின. சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்ட தடையும் விலக்கி கொள்ளப்பட்டது
இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் 99 நாட்களுக்கு பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது.
இதற்கு முன்னோட்டமாக மத்திய காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-பட்காம்- பாரமுல்லா ரயில் பாதையில் அதிகாரிகள் திங்கள்கிழமை தண்டவாளங்களை பரிசோதிக்க சோதனை ஓட்டம் நடத்தினார்கள். ஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் வரும் 16-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 17-ம் தேதி ரயில் சேவைகள் தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications