வாயை திறக்காமல் விசாரணையில் போலீசாருக்கு தண்ணீ காட்டும் இந்திராணி: வழக்கறிஞர்
மும்பை: இந்திராணி முகர்ஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் கைதான இந்திராணி முகர்ஜி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் டிரைவர் ராய் ஆகியோரின் காவலை வரும் 7ம் தேதி வரை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திராணியின் காவல் செப்டம்பர் 5ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து போலீசார் இந்திராணியை சனிக்கிழமை மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது குறித்து அரசு வழக்கறிஞர் வைபவ் பகடே கூறுகையில்,

இந்திராணி
விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும். ஆனால் இந்திராணி வாயை திறக்காமல் அடம்பிடிக்கிறார். விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. அவர் இமெயில், இன்டர்நெட்டை பயன்படுத்தி ஷீனாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஷீனா
ஷீனாவின் உடலை ஏன் அந்த இடத்திற்கு எடுத்துச் சென்று எரித்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்திராணிக்கு இன்னும் யார், யார் எல்லாம் உதவி செய்தார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.

விசாரணை
இந்திராணியும், அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவும் பல்வேறு வங்கி கணக்கு மூலம் செய்த பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்றார் வைபவ்.

கொல்கத்தா
ஷீனா கொலை வழக்கில் நான்காவது நபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது. அந்த நபர் கொல்கத்தாவைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். மிகைல் போராவை கொலை செய்ய கொல்கத்தாவில் தான் திட்டம் தீட்டப்பட்டது என்று மும்பை போலீசாருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications