‘வாடகைத் தாய்’களை விரும்பும் இந்தியர்கள்... அதிகரிக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் !
மும்பை: அதிகரிக்கும் குழந்தையின்மைப் பிரச்சினைகளால் நாட்டில் மலடு நீக்க கிளினிக்குகளும், செயற்கை முறை கருத்தரிப்புக்கான மருத்துவமனைகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2010, 12ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் இப்படிப்பட்ட கிளினிக்குகளின் எண்ணிக்கை 15 சதவீதம் கூடுதலாகியிருந்தது. இது தற்போதைய புள்ளிவிவரப்படி இந்த எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுதொடர்பான விவரத்தை இந்திய செயற்கை முறை கருத்தரிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :-

மலடு நீக்க சிகிச்சைகள்...
இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ள பெண்களுக்கு இப்போது மலடு நீக்க சிகிச்சைகள் பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளன. இப்படிப்பட்ட சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கர்நாடகத்தில் அதிகம்...
நாட்டிலேயே கர்நாடகத்தில்தான் இப்படிப்பட்ட சிகிச்சைகளுக்கு அதிகம் பேர் வருகிறார்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவை உள்ளன.

முதலிடத்தில் மகாராஷ்டிரா...
அதேசமயம், அதிக அளவிலான மருத்துவமனைகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதன்மையான இடத்தில் உள்ளது.

மலட்டுத்தன்மை குறைவு தான்...
இந்தியாவைப் பொறுத்தவரை மலட்டுத்தன்மை என்பது அதிகரிக்கவில்லை என்ற போதிலும் கூட அதுதொடர்பான மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதிய தொழில்நுட்பங்கள்....
இதில் பல புதிய தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உறைய வைத்த கரு முட்டைகளைப் பயன்படுத்துவது முதல் வாடகைத் தாய் வரை பல நுட்பங்கள் இப்போது வந்து விட்டன.

கருமுட்டைப் பாதுகாப்பு...
இதில் 64 சதவீதம் பேர் உறைய வைத்த, பாதுகாக்கப்பட்ட கரு முட்டைகளைப் பயன்படுத்தி கருத் தரிப்பதை விரும்புகின்றனர்.

உறைய வைத்த கருமுட்டை...
கடந்த 3 ஆண்டுகளில் 60 சதவீத உயர்வை இந்த தொழில்நுட்ப முறை கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த உறைய வைத்த கருமுட்டைகளைப் பயன்படுத்தும் முறையில் கிட்டத்தட்ட முழுமையான வெற்றி கிடைப்பதால் பலரும் இதை விரும்பஆரம்பித்துள்ளனர்.

வாடகைத் தாய்...
அதேபோல வாடகைத் தாய் முறைக்கும் ஆதரவு பெருகி வருகிறது. 44 சதவீதம் என்ற அளவில் இது உயர்ந்துள்ளது. பலரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விருப்பம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். சமீப காலம் வரை வெளிநாட்டினர்தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற ஆர்வம் காட்டினர். தற்போது இந்தியர்களும் அதை விரும்ப ஆரம்பித்துள்ளனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications