Jan Ki Baat Exit Polls: செம பெர்பாமன்ஸ் செய்த காங்கிரஸ்! பாஜகவுக்கு ஷாக் கொடுத்த வாக்காளர்கள்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என ஜன் கீ பாத் எக்ஸிட் போல் கணிப்பு கூறுகிறது.
சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் 958 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் 827 ஆண்களும், 130 பெண்களும் ஒரு திருநங்கையும் உள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் 51 தொகுதிகளை பெற்றது. பாஜக வெறும் 13 இடங்களில் மட்டுமே வென்றது. ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் 4 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வென்றது. அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சில இடங்களில் வென்றது.
சத்தீஸ்கரில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிலாஸ்பூர் பகுதியில் பல தொகுதிகளில் காங்கிரஸ், பாஜகவுடன் ஆம் ஆத்மியும் இணைந்து மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது.
அதற்கு முன்பு தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என இரு கணிப்புகள் வெளியாகும். அந்த வகையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (Exit polls) வெளியாகியுள்ளன. அதில் ஜன் கீ பாத் நிறுவனம் எடுத்த சர்வேயில் காங்கிரஸ் கட்சி 47 இடங்களிலும் பாஜக 37 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த முறை காங்கிரஸ் கட்சியே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளும் தேர்தல் முடிவுகளுக்கு ஓரிரு இடங்கள் வித்தியாசத்தில் இருக்கும். பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியே வெல்லும் என கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications