ஜெ. வழக்கில் அப்பீல் செய்ய வேண்டும்: சொல்வது கர்நாடக பாஜக மாஜி துணை முதல்வர்
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்டில் அப்பீல் செய்ய வேண்டும் என்று கர்நாடக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈஸ்வரப்பா இன்று கூறுகையில், ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஜெயலலிதா மீதுள்ள புகார் சிறு தொகை தொடர்பானது கிடையாது. கோடிக்கணக்கான ரூபாய் தொடர்புள்ள முறைகேடு புகார் அவர் மீது உள்ளது.

ஊழல் வழக்கில் எளிதில் விடுதலை நிகழுமானால், ஊழலை செய்வோருக்கு அச்சம் போய்விடும். நாட்டில் ஊழலும், முறைகேடுகளும் பெருகி மக்கள் அவதிப்படுவார்கள்.
சட்ட வல்லுநர்கள், கர்நாடக அரசை மேல்முறையீடு செய்ய கேட்டபிறகும், கர்நாடக அரசு காலம் கடத்துவது ஏன் என்று புரியவில்லை. மேல்முறையீடு செய்யாவிட்டால், காங்கிரஸ் கட்சி ஏதோ பெரிய தவறு செய்துள்ளது, எனவேதான், இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய தயங்குகிறது என்று மக்கள் சந்தேகப்படுவார்கள். இவ்வாறு ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
தமிழக பாஜக ஜெயலலிதாவிடம் நெருங்கி வருகிறது. அதன் அடையாளமாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா போன்றோர் ஜெயலலிதாவின் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அகில இந்தியத் தலைமையும் கூட நெருக்காமாகவே உள்ளது. மோடியே, ஜெயலலிதாவுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜகவின் இல.கணேசனும், இந்த வழக்கில் மேல்முறையீடு தேவையில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அப்பீல் தேவை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications