ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது?
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது வரும் என்ற கேள்வி பல மட்டத்திலும் எழுந்துள்ளது. இந்தியாவின் முக்கியமான ஒரு அரசியல் தலைவர் தொடர்புள்ள வழக்கு என்பதால், இந்த ஆர்வம் இயல்பானதே.
நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் அமிதவா ராய் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், கடந்த ஜூன் மாதம் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், செப்டம்பர் மாதம், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதால், வழக்கு குறித்த பேச்சு ஓய்ந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா உடல் நலம் தேறிவருவதாக அப்பல்லோ தலைவரே சமீபத்தில், கூறிய நிலையில், வழக்கின் தீர்ப்பு எப்போது என கேள்விக்குறி எழுந்துள்ளது.
சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் நீதிபதியும், கர்நாடக லோக்ஆயுக்தாவின் முன்னாள் நீதிபதியுமான, சந்தோஷ் ஹெக்டேவிடம் இதுகுறித்து கேட்டபோது, "குறிப்பிட்ட காலத்திற்குள் ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பை வெளியிட்டாக வேண்டும் என்று நீதிபதிகளை நிர்பந்திக்க சட்டம் இல்லை. கோஸ் 2017லிலும், அமிதவா ராய் 2018ம், ஆண்டிலும், ஓய்வு பெற உள்ளனர்.
இதற்கு முன்பாக தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என்ற நிர்பந்தம் மட்டுமே அவர்களுக்கு உள்ளது. தீர்ப்பை வெளியிடும் முன்பு நீதிபதி பதவி ஓய்வு பெற்றால், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பது விதிமுறை என்றார் அவர்.
எனவே, ஜெயலலிதா, மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு, எப்போது வரும், எப்படி வரும் என யாருக்கும் தெரியாது என்பதே இப்போதைய யதார்த்தம்.
-
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications