சீக்கியர்கள் வன்முறை வழக்கு...பஞ்சாப் தேர்தல் பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் கமல் நாத்
டெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக தன் மீது எழுந்த குற்றசாட்டுகளை அடுத்து பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராக பதவியை கமல் நாத் ராஜினாமா செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனிடையே திடீரென உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டு குலாம்நபி ஆசாத்தும் கமல்நாத்தும் புதிய பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கட்சியின் உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு கமல்நாத் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாக 32 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது.
சீக்கியர்கள் படுகொலை வழக்கில் பல காங்கிரஸ் தலைவர்கள் பெயர்களும் அடிபட்டு வந்தன. இந்த வழக்கின் குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ள கமல் நாத், கங்கிரசின் பஞ்சாப் தேர்தல் பொருப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதை அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடுமையாக விமரசம் செய்தன.
இதையடுத்து பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவியை கமல் நாத் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கட்சி தலைமைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களால் மனதளவில் காயம் அடைந்துள்ளதாகவும், எனவே தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications