சிஐஎஸ்எஃப் காவலரோடு தகராறு: சென்னை வக்கீல்கள் 9 பேருக்கு கர்நாடக பார் கவுன்சில் ஓராண்டு தடை
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஐஎஸ்எஃப் காவலரோடு தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் 9 வழக்கறிஞர்களுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்திற்கு வருத் வழக்கறிஞர்களை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் வழக்கமான நடைமுறையில் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுப்புவது வழக்கம்.
சோதனை மையத்தில் பெண் வழக்கறிஞரை சோதனை செய்யும் போது வீடியோ எடுத்ததாகக் கூறி, மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன், பிற வழக்கறிஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சோதனை அறையில் இருந்த திரைச்சிலைகளை கிழித்தனர். வீடியோ காட்சிகளை வெளிப்படையாக காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் சிஐஎஸ்எப் வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக 9 வக்கீல்கள் மீதும் உயர் நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு பார்கவுன்சில் உத்தரவிட்டது. அவர்கள் மீதான விசாரணை கர்நாடக பார்கவுன்சிலுக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டாக கர்நாடக பார்கவுன்சில் தலைவர் ஜெகதீஷ் தலைமையில் விசாரணை நடந்தது. வக்கீல்கள் 9 பேரும் ஆஜராகி வாதிட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில், 9 வக்கீல்களையும் ஒரு ஆண்டு தொழில் செய்ய தடை விதித்து கர்நாடக பார்கவுன்சில் நேற்று உத்தரவிட்டது.
-
நள்ளிரவு 1 மணிக்கு மது குடித்த காதல் ஜோடி.. ஒரே குடும்பம் காலையில் கிடந்த கோலம்.. ஆடிப்போன கர்நாடகா -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications