மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அணைகளின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்: கர்நாடகா தொடர்ந்து போர்க்கொடி
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அணைகளின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 6 வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வழங்கி 5 வாரங்கள் கடந்த நிலையில் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும், நதிநீர் பங்கீட்டில் இருக்கும் பிரச்னைகள் குறித்தும் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநில பிரநிதிகளிடையே கடந்த 9ம் தேதி ஒரு சிறப்பு ஆலோசனை கூட்டம் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் தரப்பில் அதன் செயலாளர் யு.பி.சிங் நடத்தி முடித்தார்.

திட்ட அறிக்கை
இதையடுத்து நான்கு மாநிலங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக செயல் திட்ட அறிக்கை ஒன்றை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

கர்நாடக அரசு ஒப்புதல்
இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு இன்று எழுத்துப்பூர்வ அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழகத்திற்கு 70 டிஎம்சி தண்ணீர் தரவில்லை கர்நாடகா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

குறைவாக திறப்பு
ஜூன் முதல் பிப்ரவரி வரை 184.50 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்திருக்க வேண்டும். ஆனால் வறட்சி காரணமாக, 114.185 டிஎம்சி தண்ணீரைத்தான் தமிழகத்திற்கு திறக்க முடிந்தது என மத்திய நீர்வளத்துறை செயலாளர் உத்தரவின்படி கர்நாடக அரசு எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்துள்ளது.

கண்காணிப்புக்குழு அமைக்கலாம்
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்றும் கர்நாடக அரசு தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. காவிரி மேற்பார்வை, கண்காணிப்புக்குழு போன்றவற்றை அமைக்க ஆட்சேபம் இல்லை என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அணைகளின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்றும் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications