தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முந்திய கர்நாடகா - பிந்திய தமிழகம்
2017ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு 3.95 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது. இதில் 0.8 சதவிகிதம் மட்டுமே தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகம் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள அமைதியான மாநிலம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தொழில் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அரசு அனுமதி வழங்கி வருகிறது. தமிழகத்தில் மின்தடை அறவே கிடையாது. வெளிப்படையான அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் பின் தங்கியுள்ளதாக மத்திய அரசின் அறிக்கை கூறியுள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2017ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு 3.95 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா முதலிடம்
இந்திய மாநிலங்களில் 1.52 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்று கர்நாடக முதலிடத்தில் இருக்கிறது. 79,068 கோடி ரூபாய் முதலீட்டை பெற்று குஜராத் 2ஆம் இடத்தை பிடித்திருக்கிறது. மராட்டிய மாநிலம் 2017ஆம் ஆண்டில் 48,581 கோடி ரூபாயை முதலீட்டாக பெற்று 3ஆம் இடத்தில் உள்ளது. ஆனால் தமிழகமோ 3,131 கோடி ரூபாயை மட்டுமே பெற்றிருக்கிறது.

தொழில் முதலீடு சரிவு
தமிழகத்தில் 1 சதவிகிதத்திற்கு கீழ் மட்டுமே, அதாவது 0.8 விழுக்காடு மட்டுமே தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்ற தன்மை காரணமாகவே தொழில் முதலீட்டின் விகிதம் சரிந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பேச்சு
ஜெயின் சமூகத்தினர் நடத்திய விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2015ஆம் ஆண்டு நடந்தது. அதில் 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார். முதலீட்டாளர்கள் வருவார்களா?
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications