ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம்... கேரள அரசு அறிவிப்பு
ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகத்தையும், கேரளத்தின் சில பகுதிகளையும் பதம் பார்த்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஓகி புயலினால் மாயமாகினர். அவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன.
கேரளத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஓகி புயலினால் உயிரிழந்துவிட்டனர். அது குறித்த கணக்கெடுப்பை எடுத்த கேரள அரசு அந்த 28 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் என்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications