Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிணத்தை மாற்றிய மருத்துவமனை: 25 லட்சம் ரூபாய் பணம் வழங்க ஆணை

கேரளாவில் மாரடைப்பால் உயிரிழந்தவரின் உடலுக்கு பதில் வேறொருவரின் உடலை மாற்றிக்கொடுத்த மருத்துவமனைக்கு நீதிமன்றம் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: புருஷோத்தமன் என்பவரின் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை தவறுதலாக ஒப்படைத்த மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்னாகுளத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவர். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் 30அம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருந்ததால் அவரது உடல் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

kerala hospital gives wrong body for cremation, court slaps 25 lakh fine

இதையடுத்து 2010ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அவரது உடலை பெற வந்த உறவினர்களிடம், புருஷோத்தமன் இறந்த நாளன்று இறந்த காந்தி என்பவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது.

இதனை கண்டுபிடித்த புருஷோத்தமனின் மகள்கள் தந்தையின் உடல் இது அல்ல என்று கூறி பெற மறுத்தனர். இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் பிணவறை ஊழியர் தவறுதலாக காந்தியின் குடும்பத்தினரிடம் புருஷோத்தமனின் உடலை கொடுத்தது தெரியவந்தது.

இந்த வழக்கு அம்மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் மருத்துவமனையின் அலட்சியமே இந்த தவறுக்கு காரணம் என்று கூறிய நீதிமன்றம், மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அந்த தொகையை புருஷோத்தமனின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+