ஆம் ஆத்மி ஒரு நீர்க்குமிழி- விரைவில் வெடித்துவிடும்: லாலு கணிப்பு
Subscribe to Oneindia Tamil

ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, ஆம் ஆத்மி கட்சியின் அத்தியாயம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். தலையை மஃப்ளர் வைத்து மறைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றனர் ஆம் ஆத்மி கட்சியினர்.
இலவச மின்சாரம் கொடுக்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது. அதேபோல் குடிசைப் பகுதி மக்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தரப்போவதாகவும் அக்கட்சி சொல்கிறது. ஆனால் அனைத்துமே பொய்.
ராகுல் காந்திதான் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். அவர் பிரதமராவதில் என்ன தவறு? இருப்பினும் அவர் பிரதமர் வேட்பாளரா இல்லையா என்பதை காங்கிரஸ்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications