ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுற்றி வளைத்து கைது!
ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருந்த பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒமர் காலிக் பாதுகாப்புப் படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அதிகபட்ச உஷார் நிலையில் பாதுகாப்பு படையினர் உள்ளனர்.

இந்த நிலையில் பாரமுல்லா பகுதியில் 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் கூட்டாக இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் பாரமுல்லா மாவட்டம் சோபோர் அருகே டுஜ்ஜெர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த ஒமர் காலிக் என்ற தீவிரவாதி பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications