ரயிலின் முன் குதித்து குடும்பத்துடன் தற்கொலை செய்த விரிவுரையாளர்- 3 வயது குழந்தை தப்பியது!
டெல்லி: டெல்லியில் கிட்டதட்ட 11 பக்கங்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு குடும்பமே ரயிலின் முன்னர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கல்ப் ஆனந்த் என்பவர் தன்னுடைய மனைவி, மற்றும் 3 வயதான குழந்தையுடன் டெல்லியிலிருந்து மதுரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் முன்பாக குதித்து உயிரை விட்டுள்ளனர்.
சங்கல்ப்பும், மனைவியும் இறந்துவிட்ட நிலையில் 3 வயதான குழந்தை ரித்திமா மட்டும் அதிர்ஷ்டவசமாக பல்வேறு படுகாயங்களில் இருந்து தப்பி தன்னுடைய தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சங்கல்பின் தந்தை சந்தோஷ் ஒரு பிரபலமான பாடலாசிரியர். "எங்களுடைய பேத்திக்காக நாங்கள் வாழவேண்டும்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கிட்டதட்ட 11 பக்க தற்கொலை கடிதத்தினை எழுதியுள்ள அவர், அதில் தான் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் பாரன்சிக் சயின்ஸ்சில் வேலை செய்த பொழுது பெரும் ஊழலில் மாட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதனால், தலைமை அதிகாரிகளின் தொல்லை தாங்க முடியாமல், மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சில அதிகாரிகளின் நடுவில் பெரும் பதட்டத்தையும் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications