கட்சியில் உள்ள அனைவருக்கும் தேர்தல் வெற்றியில் பங்கிருக்கிறது... மோடியை ஓரங்கட்டும் அத்வானி
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 3 மாநிலங்களில் வெற்றியையும், டெல்லியில் அதிகப் படியான தொகுதிகளில் வெற்றியும் பெற்றதற்கு முக்கியக் காரணம் அம்மாநில முதல்வர்களே எனப் பாராட்டியுள்ளார் அக்கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானி.
பாரதீய ஜனதா தனது தேர்தல் வெற்றிக்குக் முக்கியக் காரணம் என அக்கட்சியின் பிரதம வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான நரேந்திர மோடியே என அனைவரும் புகழ்ந்து கொண்டிருக்க, அத்வானி மட்டும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதைக் காட்டுகிறது அவரது சமீபத்திய பேட்டி.
மேலும், தேர்தல் வெற்றிக் குறித்து பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஓருவரான எல்.கே.அத்வானி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ‘இந்தத் தேர்தல் வெற்றியில் கட்சியில் உள்ள அனைவருக்கும் பங்கிருக்கிறது, முக்கியமாக முதல்வர்களுக்கு' எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், வெற்றிக்கு முக்கியக் காரணம் மோடி தான் எனக் கூறியிருந்தார்.
ஆனால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டதிலிருந்து தொடர்ந்து அமைதி காத்து வந்த அத்வானி, தற்போது சிவ்ராஜ் சிங் சௌகான் மற்றும் ராமன் சிங் பொன்றோர் தேர்தலுக்காக அதிகமாக உழைத்திருப்பதாகப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications