காதலர் கண் முன்பு 17 வயது சிறுமியை சீரழித்த 3 காமக்கொடூரன்கள்
மும்பை: மகாராஷ்டிராவில் 17 வயது சிறுமியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது காதலருடன் தீஸ்காவ்ன் ஷிவாருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அப்போது கோல்வாடி பகுதியில் 3 பேர் அந்த சிறுமியை பார்த்துள்ளனர். அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் சிறுமியின் காதலரை பிடித்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த காதலர் உதவி கேட்டு அலறியுள்ளார். அவரின் கண் முன்பு அந்த 3 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியும், அவரது காதலரும் உதவி கேட்டு அலறியும் யாரும் வரவில்லை.
சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் சிறுமியையும், அவரது காதலரையும் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் தேடி வருகிறார்கள்.