ரூ.13,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் பங்களாக்கள் இடிக்கப்படும்: மகாராஷ்டிர அமைச்சர் தகவல்
ரூ.13,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் பங்களாக்கள் இடிக்கப்படும் என மகாராஷ்டிர அமைச்சர் ராம்தாஸ் கதம் கூறியுள்ளார்.
மும்பை: பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்ததில் தொடர்புடைய நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோர் சட்ட விரோதமாக கட்டிய பங்களாக்கள் இடிக்கப்படும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட், அலிபாக் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பங்களாக்களை ஏன் இடிக்கவில்லை என்று மும்பை உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது.

இதைத்தொடர்ந்து, கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பங்களாக்களை இடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர மாநில அமைச்சர் ராம்தாஸ் கதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராம்தாஸ் கதம் கூறுகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி, ஆகியோருக்கு சொந்தமான பங்களாக்கள் உட்பட 172 பங்களாக்கள் இடிக்கப்படும் என்று கூறினார்.
மேலும், அமைச்சர் ராம்தாஸ் கதம் கூறுகையில், சட்டவிரோதமான பங்களாக்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்படும். அமலாக்கத் துறையினருக்கு தெரிவித்த பின் நீரவ் மோடி, மெகுல் சோக்சி பங்களாக்கள் இடிக்கப்படும் என்று கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications