மஹாராஷ்டிராவில் தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து... 17 பேர் பலி, 15 பேர் படுகாயம்!
மஹாராஷ்டிராவில் தடுப்புச் சுவரில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
புனே: மஹாராஷ்டிராவில் தடுப்புச் சுவரில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். லாரியில் பயணம் செய்த 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலையில் லாரி ஒன்று சாலையின் தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டாலா அருகே புனே- சட்டாரா தேசிய நெடுஞ்சாலையில் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது.

தடுப்புச் சுவரில் மோதியதால் லாரியின் முன்பக்கம் சுக்கு நூறாக உடைந்தது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் லாரியில் பயணம் செய்த 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications