திப்ருகரில் இருந்து டெல்லி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயங்கர தீ

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரில் இருந்து குவாஹாத்தி வழியாக டெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் கிளம்பியது. அந்த ரயில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு அஸ்ஸாமில் உள்ள தரம்துல் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சமையல் அறை உள்ள பெட்டி திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீப் பிடித்த பெட்டி முழுவதுமாக எரிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. ஆனால் தப்பித்து ஓடுகையில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த ரயிலில் இருந்த பயணிகள் குவஹாத்தி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் வேறு ரயில் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications