11 ஆண்டுகளாக மகளை சீரழித்து தாயாக்கி திருமணம் செய்ய முயன்ற காமக்கொடூர தந்தை
மும்பை: மும்பையில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கி அவரை திருமணம் செய்ய முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை மலாத் பகுதியில் உள்ள மல்வானியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் ஷேக்(50). அவர் தனது மகளுக்கு 15 வயது இருக்கையில் அவருக்கு பருவநிலை மாற்றம் குறித்து கற்றுத் தருகிறேன் என்று கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அவர் தனது மகளை பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
இதை தடுத்த மனைவியை அவர் அடித்துள்ளார். சுமார் 11 ஆண்டுகளாக அவர் தனது மகளை மிரட்டியே உறவு கொண்டு வந்துள்ளார். இதில் கர்ப்பமான மகள் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது 26 வயதாகும் இப்ராஹிமின் மகளுக்கு தந்தை மூலமாக 8 வயது மகள் உள்ளார். இந்நிலையில் ஷேக் பெற்ற மகளையே திருமணம் செய்ய முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இப்ராஹிமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications