திருமணம் செய்ய மறுத்த பெண், அவரது தோழி மீது ஆசிட் ஊற்றிய நபர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு டெல்லியில் தன்னை திருமணம் செய்ய மறுத்த இளம் பெண் மற்றும் அவரது தோழி மீது வாலிபர் ஒருவர் ஆசிட் ஊற்றியுள்ளார்.

மேற்கு டெல்லியில் உள்ள பேகம்பூரைச் சேர்ந்தவர் பார்வதி(18). அவரிடம் மனோஜ் என்ற திருமணமானவர் தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்டு வற்புறுத்தியுள்ளார். ஆனால் பார்வதி மறுத்துள்ளார். இந்நிலையில் பார்வதி தனது தோழி காயத்ரியுடன்(16) சேர்ந்து நேற்று மாலை மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்களை வழிமறித்த மனோஜ் அவர்கள் மீது ஆசிடை ஊற்றிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் பார்வதிக்கு 50 சதவீத காயங்களும், காயத்ரிக்கு 20 சதவீத காயங்களும் ஏற்பட்டது. முதலில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் பின்னர் லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மனோஜை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து புகார் செய்த பார்வதியின் தாய் தனது மனுவில் கூறியிருப்பதாவது, மனோஜ் எனது மகளுக்கு பல காலமாக தொல்லை கொடுத்து வந்தான். இது தொடர்பாக நாங்கள் போலீசில் புகார் கொடுத்தோம். போலீசார் அவனை பிடித்து அடித்த பிறகு என் மகளை தொந்தரவு செய்ய மாட்டேன் என்றான். ஆனால் அவள் மார்க்கெட்டுக்கு சென்றபோது அவள் மீது ஆசிட் ஊற்றிவிட்டான் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+