Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதர் தெரசாவிற்காக மீண்டும் கால்பந்து விளையாடும் மாரடோனா... கொல்கத்தாவில் களம் இறங்குகிறார்

பிரபல கால்பந்து வீரர் டியகோ மாரடோனா கொல்கத்தாவில் அன்னை தெரசா உருவாக்கிய தொண்டு நிறுவனங்களுக்காக கால்பந்து விளையாட உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: பிரபல கால்பந்து வீரர் டியகோ மாரடோனா கொல்கத்தாவில் அன்னை தெரசா உருவாக்கிய தொண்டு நிறுவனங்களுக்காக கால்பந்து விளையாட உள்ளார். இதற்காக அவர் தற்போது இந்தியா வந்துள்ளார்.

அவர் கால்பந்து போட்டியில் விளையாடுவது மட்டும் இல்லாமல் இன்னும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். மேலும் சில கிரிக்கெட் வீரர்களையும் அவர் பார்ப்பதற்கு வழி இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் அவர் கொல்கத்தாவில் தான் சாப்பிடும் உணவுப்பொருட்கள் குறித்தும் பேசி உள்ளார். என்ன மாதிரியான உணவுகள் பிடிக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் மாரடோனா

இந்தியாவில் மாரடோனா

பிரபல அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனா தற்போது இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அவர் வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கொல்கத்தாவில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார். இது இவரது இரண்டாவது இந்திய பயணம் ஆகும். இதற்கு முன் இவர் கேரளாவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள இந்தியா வந்திருந்தார்.

சாப்பாடு

சாப்பாடு

இவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் இவருக்காக சிறப்பான உணவுகள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக லத்தின் அமெரிக்காவை சேர்ந்த சமையல்காரர் களம் இறக்கப்பட்டுள்ளார். இவருக்கு பீப் மற்றும் கோழி கறி பிடிக்கும் என்பதால் அதில் நிறைய உணவுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் காரமான உணவுகளும் நிறைய தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

என்ன செய்கிறார்

என்ன செய்கிறார்

இவர் முதல் திட்டமாக கொல்கத்தாவில் அன்னை தெரசா நிறுவிய தொண்டு இல்லத்திற்கு செல்ல உள்ளார். அந்த நிறுவனம் நடத்தும் கால்பந்து போட்டியில் கலந்து கொள்வார். இந்த பணம் அந்த தொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இதற்காக பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாரடோனா இதில் விளையாடுவது கடைசி நேரத்தில் சந்தேகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கங்குலியுடன் மோதும் மாரடோனா

கங்குலியுடன் மோதும் மாரடோனா

தற்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கங்குலியை சந்திப்பதாக முடிவாகி உள்ளது. கங்குலி நடந்ததும் கால்பந்து போட்டியில் இவர் மரியாதை நிமித்தமாக கலந்து கொள்வார். இது பெரிய அளவில் கால்பந்து குறித்த கருத்தரங்கம் மாதிரி நடக்க இருக்கிறது. மேலும் இதில் சில நிமிடம் மாரடோனா, கங்குலியுடன் விளையாடுவார் என்றும் கூறப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+