எல்லை ஊடுருவல் குறித்து சீனா அதிபரிடம் பிரதமர் மோடி பேசினார்: வெளியுறவு துறை அமைச்சகம்
டெல்லி: இந்திய பகுதிக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைவது குறித்து, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அந்நாட்டு அதிபரிடம் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார் என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றங்கரையோரம் பிரதமர் மோடியும் சீனா அதிபர் ஜின்பிங்கும் சிறிது நேரம் நடந்தனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபருக்கு விருந்து வைத்தார். அப்போது எல்லையில் சீன படையினரின் அத்துமீறல் குறித்து தனது கவலையை சீன அதிபரிடம் எடுத்துரைத்தார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதனிடையே, நேற்று ஜம்மு காஷ்மீரின் ஷூமர் பகுதியில் அத்துமீறிய சீன வீரர்கள் அந்த பகுதியில் இருந்து திரும்ப மறுத்துவிட்டனர். சுமார் 1,000 சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் சுமார் 5 கிமீட்டர் தூரத்திற்கு நேற்று அத்துமீறி நுழைந்தனர்.
இதையடுத்து கூடுதல் படையுடன் ஷுமர் பகுதிக்கு இந்திய படைகள் விரைந்தன. இந்த பதற்ற சூழலை தவிர்க்க இரு நாடுகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற கொடி அமர்வு கூட்டம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications