அமைச்சர் வி.கே.சிங் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் அமளி
டெல்லி: அமைச்சர் வி.கே.சிங்கிற்கு எதிராக அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திர விவகாரத்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நிலவியது.
தற்போதைய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், ராணுவ தளபதியாக பதவி வகித்தபோது, தனக்கு அடுத்த ரேங்கில் இருந்த தல்பிர் சிங்கிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தார். இது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் இரு நாட்களுக்கு முன்பு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அமைச்சருக்கு எதிராக அரசே விமர்சனம் செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சி இதை அரசியல் ஆயுதமாக்கியுள்ளது.

மக்களவை இன்று கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க கோரி கோஷமிட்டனர். வி.கே.சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்களை அமைதிப்படுத்தினார்.
இதே பிரச்சினை ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. காங்கிரசாரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி, " ஐக்கிய முற்போக்கு கூட்டணி அடுத்த ராணுவ தளபதியாக தல்பிர் சிங்கை நியமித்து சில வாரங்கள் முன்பு உத்தரவிட்டது. ராணுவ விவகாரங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். எனவே கடந்த அரசின் உத்தரவுப்படி, ராணுவ தளபதியாக தல்பிர்சிங் நியமிக்கப்படுவதையே இந்த அரசும் விரும்புகிறது. ராணுவ பிரச்சினை குறித்து அவையில் மேற்கொண்டு விவாதிப்பது சரியில்லை. இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அமைச்சர் வி.கே.சிங் மீது விமர்சனம் செய்வதும், அவர் அதை மறுத்துள்ளதும் அரசு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டது" என்றார்.
இருப்பினும் வி.கே.சிங் குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதற்கு அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி அனுமதி மறுத்து, குடியரசு தலைவர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுமாறு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications