இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 16 வயது சிறுமி துப்பாக்கி முனையில் 4 பேரால் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

மீரட்: உத்தர பிரதேசத்தில் 16 வயது சிறுமியை 4 வாலிபர்கள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகர் அருகே உள்ள கிதோர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சனிக்கிழமை மாலை இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது 20 முதல் 25 வயது வரை உள்ள கௌதம், அவ்னீஷ், சுனில் மற்றும் புரே ஆகியே 4 வாலிபர்கள் சிறுமியை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் நடந்தது பற்றி யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர். சிறுமி மயக்கம் அடைந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

மயக்கம் தெளிந்த பிறகு சிறுமி வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறினார். உடனே அவர்கள் இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+