வெள்ளி கொலுசுக்காக 70 வயது பாட்டியின் காலை துண்டித்த திருடர்கள்... 5 பேர் கைது
இந்தூர்: வெள்ளி கொலுசை திருடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் மத்தியப்பிரதேசத்தில் மூதாட்டி ஒருவரின் காலை திருடர்கள் துண்டித்து சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் வசிக்கும் பெண்கள், தங்கள் கால்களில் 'தண்டை' போன்ற கனமான வெள்ளி கொலுசுகளை அணிவது வழக்கம்.
அந்தவகையில், மத்தியப்பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள பகாடியா காட்டுப் பகுதியில் கஸ்தூரி பாய்(70) என்ற மூதாட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். கஸ்தூரி தனது காலில் வெள்ளியால் கனமான தண்டை அணிந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த திருடர்கள் சிலர் கத்தியை காட்டி மிரட்டி, கஸ்தூரியை கட்டிப் போட்டு விட்டு அவரது கொலுசை திருட முயற்சித்துள்ளனர். ஒரு கொலுசை கழற்றிய திருடர்களுக்கு மற்றொரு கொலுசை கழற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தாமதப் படுத்தினால் ஊர் மக்களிடம் சிக்கிக் கொள்வோம் என அஞ்சிய திருடர்கள், சற்றும் ஈவிரக்கமின்றி அந்த மூதாட்டியின் காலை துண்டித்து, கொலுசை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்கள்.
பின்னர் ஊர் மக்களால் மீட்கப்பட்ட கஸ்தூரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பழைய குற்றவாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications