மதுபானம் குடித்திருந்தால் வண்டி ஸ்டார்ட் ஆகாது.. விபத்தை தடுக்கும் புது பைக்! கண்டுபிடித்த மாணவர்கள்
போபால்: மது போதையில் வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், விபத்துக்களை தடுக்கும் வகையில் புதிய எலக்ட்ரிக் பைக்கை எம்என்என்ஐடி மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் குடிபோதையினால் ஏற்பட்ட விபத்துக்களில் சுமார் 3,314 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்த ஆண்டுகளில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என சமூக செயல்பாட்டாளர்கள் உறுதியாக கூறுகின்றனர். இதுவரை வெளியான தகவல்களின்படி உத்தரப் பிரதேசத்தில் அதிக அளவு இதுபோன்ற விபத்துக்கள் நடக்கின்றன.

எனவே இதனை தடுக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தின் எம்என்என்ஐடி மாணவர்கள் புதிய வகை எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளனர். குடித்துவிட்டு இந்த பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றால், பைக் ஸ்டார்ட் ஆகாது என்பதே இதன் சிறப்பம்சம். அலகாபாத்தின் எம்என்என்ஐடி மாணவர்களும் ஆட்டோமேட்டிக் என்ஜினியர்ஸ் சொசைடியும் இணைந்து இந்த புதிய வகை பைக்கை உருவாக்கியுள்ளனர்.
இது மற்ற சாதாரண எலக்ட்ரிக் பைக்கை போலதான் இருக்கும். இதன் பேட்ரியை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 60 கி.மீ வரை ஓட்ட முடியும். அதேபோல, அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் இதில் பயணிக்க முடியும். பைக்கில் ஸ்மோக் சென்சார்கள், ஆல்கஹால் அளவை கண்டறியும் கருவிகளும் இருக்கின்றன. இதுதவிர, பைக்கை திருட முயன்றால் அலாரம் ஒலிக்கும், பைக் விபத்திற்குள்ளானால் அது தானாகவே அவசர உதவி எண்களுக்கு போன் செய்துவிடும். மட்டுமல்லாது மலை போன்ற செங்குத்தான பாதையில் கூட இது எளிதாக ஏறிவிடும்.
MNNIT இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் உதவி பேராசிரியரின் மேற்பார்வையில் இந்த பைக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இம்பீரியல் சொசைட்டி ஆஃப் இன்னோவேடிவ் இன்ஜினியர்ஸ் (ஐஎஸ்ஐஇ) சமீபத்தில் போபாலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த பைக்கை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இதில் நாடு முழுவதுமிருந்து வெவ்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் தயாரித்த பைக்குகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
எம்என்என்ஐடி மாணவர்கள், தங்கள் பைக்கை உருவாக்க ரூ.1.30 லட்சம் வரை செலவானதாக கூறியுள்ளனர். இந்த பைக் ஐஎஸ்ஐஇ நிகழ்ச்சியில் 2 விருதுகளை தட்டி சென்றிருக்கிறது. விருது வெல்ல காரணமாக இருந்த மாணவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படும் என்று எம்என்என்ஐடி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த வகை பைக்குகள் சந்தைக்கு வந்தால் மதுபோதையால் ஏற்படும் வாகன விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications