லோக்சபாவில் வாக்களித்த மோடி... 10 ஆண்டுகளில் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட முதல் பிரதமர்!
டெல்லி: நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான நேற்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். கடந்த பத்து ஆண்டுகளில் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் வாக்களிப்பது இதுவே முதன் முறையாகும்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருமுறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ராஜ்யசபா மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே, நாடாளுமன்றத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த வாக்கெடுப்புகள் எதிலும் அவரால் பங்குபெற இயலவில்லை.
தற்போது மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில், நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது.
அந்த வாக்கெடுப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். இந்த வாக்கெடுப்பு முறை பழைய வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications