பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது... சோனியா காந்தி கடும் தாக்கு
Recommended Video

டெல்லி: எதிர்க்கட்சிகளை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயந்து ஓடுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
நவம்பர் 3வது வாரம் முதல் டிசம்பர் மூன்றாவது வாரம் வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பது மரபு. ஆனால் இவ்வாண்டு டிசம்பர் 2வது வாரத்தில் குளிர்கால கூட்டத்தொடரை தொடங்கி 10 நாட்களிலேயே நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், சோனியா காந்தி கூறியுள்ளதாவது: சரியாக தயார் செய்யப்படாத ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கூட்டிய பிரதமர் மோடியால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சந்திக்க தைரியம் இல்லை.

ஜனநாயக கோயில்
குளிர்கால கூட்டத்தொடரை புறக்கணிப்பதன் மூலம், மோடி அரசு, இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்தப்போகிறது. ஜனநாயகத்தின் கோயில் நடையை சாத்திவிட்டால், அரசியல் சாசன பொறுப்புகளை புறம்தள்ளிவிடலாம் என இந்த அரசு நினைக்கிறது.

குஜராத் தேர்தல்
நாடாளுமன்றம் கேள்விகளை கேட்டு பதிலை பெறுவதற்கான இடம். ஆனால் குஜராத் தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் கேள்விகளை தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை கூட்டாமல் அஞ்சியுள்ளது அரசு.

பண மதிப்பிழப்பு
மக்களின் வெந்த புண் மீது வேலை பாய்ச்சிய செயல்தான் பண மதிப்பிழப்பு. விவசாயிகள், சிறு வணிகர்கள், இல்லத்தரசிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் படாதபாடு படுகின்றனர்.

இன்னும் அறிவிப்பு
இன்னும் பிரதமர் அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளார். பொய் வாக்குறுதிகளை அளிக்கிறார். அந்த புள்ளி விவரங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு தொடர்பே இல்லாததாக உள்ளன. ஜவகர்லால் நேரு, இந்திரா காந்த ஆகியோர முன்னாள் பிரதமர்கள் பெயர்களை வரலாற்றில் இருந்து அகற்ற மோடி அரசு முயலுகிறது. இவ்வாறு சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications