ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு ஒரு சல்யூட்... போர் நினைவிடங்கள் கட்ட ரூ 100 கோடி ஒதுக்கீடு!
டெல்லி: இன்றைய பட்ஜெட்டில் போர் மற்றும் காவலர் நினைவிடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. மோடி தலைமையிலான இந்த அரசின் முதல் மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
அதில், ராணுவ வீரர்களின் தியாகத்தை எடுத்துரைக்கும் வகையில் ரூ 100 கோடி செலவில் போர் நினைவிடமும், ரூ 50 கோடி செலவில் காவலர் நினைவிடமும் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த் தியாகம்...
இது தொடர்பாக அருண் ஜெட்லி கூறுகையில், ‘நாட்டின் பெருமையை காக்க உயிர்த்தியாகம் உள்ளிட்ட பெரிய தியாகங்களை செய்த ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுத படை வீரர்களுக்கு நாடு மிகவும் கடமைப்பட்டுள்ளது.

நினைவிடங்கள்...
அவர்களை நினைவு கூறும் விதமாகவும், கவுரவப் படுத்தும் விதமாகவும் டெல்லியில் உள்ள பிரின்சஸ் பார்க்கில் ரூ 100 கோடி செலவில் இந்த நினைவிடங்கள் அமைக்கப் படுகின்றன' என அவர் தெரிவித்தார்.

காவலர் நினைவிடம்...
அதனைத் தொடர்ந்து தேசிய அகாவலர்களுக்கான நினைவிடம் கட்டுவதற்கு என ரூ 50 கோடியை ஒதுக்கீடு செய்தார் அருண் ஜெட்லி. அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ராணுவ வீரர்களைப் போலவே போலீசாருக்கும் நாடு கடமைப்பட்டுள்ளது.

அஞ்சலி...
நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவும், சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காகவும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்யும் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நினைவிடம் கட்டப் படுவதாக அவர் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications