மிளகு பொடி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை செக் அப் செய்து அனுமதிக்க முடிவு

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமையன்று தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
அப்போது ஆந்திரா மாநிலம் சீமாந்திரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. லகடபதி ராஜகோபால் மிளகு பொடியை தூவினார் இதனால் பல எம்.பி.க்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.பி.ஒருவர் கத்தியை வைத்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்தும் இருந்தார். மக்கள் பிரதி நிதிகளான எம்.பி.க்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், நடாளுமன்றத்துக்கு வரும் எம்.பி.க்களிடம் போலீசார் சோதனை செய்வது இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கடந்த வியாழக்கிழமை ஆந்திர எம்.பிக்கள் மிளகு பொடி, கத்தி போன்றவற்றை அவைக்குள் கொண்டு சென்றுள்ளனர்.
இது போன்ற சம்பவங்களால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பெருமை சீர் குலைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மரபு சிதைக்கப்படுகிறது. எம்.பி.க்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இதை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் மீராகுமார் கூறினார்.
வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நாடாளுமன்றத்தின் கூட்டத்தின் போது நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தினார். இதற்காக நாடாளுமன்றப் பாதுகாப்பு குழு எம்.பி.க்களின் அவசர கூட்டத்தை கூட்டவும் உத்தரவிட்டார்.
இந்த கூட்டம் வரும் திங்கட்கிழமை 17-ந் தேதி கூடுகிறது. இதற்கு பா.ஜனதா மூத்த தலைவரும், நாடாளுமன்றப் பாதுகாப்பு எம்.பி.க்கள் குழுவின் துணைத் தலைவருமான கரிய முண்டா தலைமை தாங்குகிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications