CSK vs SRH தோனி தலைமையில் சிஎஸ்கே வெற்றி: ஜடேஜா தலைமை குறித்து தோனி கூறியது என்ன?
ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்துவந்தது. இதற்கு முன்புவரை நடந்த 8 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகினார். மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக தோனி பொறுப்பேற்று முதல் ஆட்டத்திலேயே சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
வெற்றிக்குப் பிறகு ஜடேஜாவின் தலைமை குறித்தும், அவருக்கு என்ன நெருக்கடி இருந்தது என்பது குறித்தும் தோனி பேசியவை டிரெண்டாகி வருகின்றன.
வெற்றி பெற்ற அணியின் கேப்டனாக மேட்ச் முடிந்த பின் பேசிய தோனி, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது, அதனை ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கியது, பின் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றது என பலவற்றை குறித்து பேசினார்.
இந்த மேட்சுக்கு ஒருநாள் முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜா, அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தோனியை கேட்டுக்கொண்டார். அதனை 'கேப்டன் கூல்' ஏற்றுக்கொண்டார்.
ஒரே இரவில் ஏற்பட்ட இந்த மாற்றம் கிரிக்கெட் உலகிலும் பொதுமக்கள் மத்தியிலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
இந்த மாற்றம் குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதில் அளித்த அவர், "இந்த சீசனில் ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்புக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பது கடந்தாண்டிலேயே அவருக்கு தெரியும். அதற்காக தயார்படுத்துவதற்கு அவருக்கு போதிய கால அவகாசம் இருந்தது. முதல் இரு மேட்ச்களில் அவருடைய பணியை நான் கண்காணிக்க மட்டுமே செய்தேன். அதன்பிறகு, அவரே முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், அம்முடிவுகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவரிடம் வலியுறுத்தினேன்" என தெரிவித்தார்.
https://twitter.com/ChennaiIPL/status/1520821733506568192
"கேப்டனாக பொறுப்பேற்கும் போது பல விஷயங்களை கவனிக்கவேண்டும் வேண்டும். ஆனால், தொடர் செல்ல செல்ல, கேப்டன் பொறுப்பின் அழுத்தம் அவரது விளையாட்டை பாதிக்க செய்தது.
கேப்டன் பொறுப்பை ஏற்றுச் செய்வது என்பது மெதுவாக நடக்கும் மாற்றம். கேப்டனாக இருக்கும்போது நாம் பலவற்றை கவனிக்க வேண்டியிருக்கும். அதில் ஒன்று உங்களின் விளையாட்டு" என தெரிவித்தார்.
கேப்டன் பொறுப்பின் அழுத்தத்திலிருந்து விடுபட்டதால், ஜடேஜா மீண்டும் புத்துணர்ச்சியுடன் 'ஆல்-ரவுண்ட்'டராக விளையாட்டை தொடர்வார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த தோனி, குறிப்பாக 'பீல்டிங்'கில் கவனம் செலுத்துவார் என தெரிவித்தார். இந்த சீசனில் பீல்டிங்கில் மிக மோசமாக உள்ள சிஎஸ்கே, எளிமையான கேட்ச்களை கூட தவறவிட்டது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் இத்தகைய எளிமையான கேட்ச்களை சிஎஸ்கே நழுவவிட்டது.
https://twitter.com/ChennaiIPL/status/1520764996799451136
"இந்த மேட்ச்கள் கடினமானவை, எனினும் நாங்கள் வலுவுடன் திரும்பிவருவோம்" என தெரிவித்தார்.
இந்த சீசனில் ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்பது முன்னரே திட்டமிடப்பட்டது என்றும் அம்முடிவை தான் ஆதரித்ததாகவும் தோனி கூறினார். மேலும், கேப்டனாக ஜடேஜாவின் முடிவுகளில் தலையிட வேண்டாம் என தான் நினைத்ததாகவும் கூறினார்.
நேற்றைய மேட்ச்சில் முதலாவதாக விளையாடிய சென்னை அணி 202 ரன்களை அடித்தது, இதில் பாதி அதாவது 99 ரன்களை ருதுராஜ் கேய்க்வாட் அடித்தார். டேவன் கான்வே 85 ரன்கள் (நாட் அவுட்) அடித்தார். அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் 189 ரன்களை அடித்தது. இதையடுத்து இந்த மேட்ச்சில் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
"நான் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை. கேப்டன் மாறிவிட்டதால் அனைத்துமே மாறிவிட்டது என பொருள் அல்ல" என வெற்றி குறித்து தோனி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவராக தோனி உள்ளார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக அவர் உள்ளார்.
ஐபிஎல் தொடர்களை சிஎஸ்கே வெல்ல தோனியின் தலைமைப் பண்பு காரணமாக இருந்ததாக அவர் பலராலும் பாராட்டப்படுகிறார்.
கேப்டனாக இருந்தபோது ஜடேஜாவின் ஆட்டமும் சிறந்ததாக இல்லை என்ற கருத்து உள்ளது. இதுவரை 112 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?

















Click it and Unblock the Notifications