ராபர்ட் வதேராவை பாடாய் படுத்துகிறார்களே.. வக்காலத்து வாங்கும் பிரியங்கா
ரேபரேலி: தமது கணவர் ராபர் வதேரா மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பாடாய்படுத்துகின்றனர் என்று சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரியங்கா கூறியதாவது:
என் கணவர் வதேரா பற்றி அவதூறு பரப்புகின்றனர். ஆனாலும் என் பாட்டி இந்திராவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும். வதேரா மீதான நில மோசடி புகார்களில் உச்சநீதிமன்றமே விசாரணை தேவையில்லை என்று சொல்லிவிட்ட பிறகும் அரசியல் சார்ந்த குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பதாலேயே அவரை விமர்சிக்கின்றனர்.

எனது கணவருக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. என் கணவர் தொடர்து அவமதிக்கப்படுகிறார். நான் மிகவும் காயப்பட்டுள்ளேன். அவர்கள் எங்களது குடும்பத்தின் மீது பல ஆண்டுகளாக குறி வைத்து தாக்கி வருகின்றனர்.
தங்களின் அரசியல் லாபத்திற்காக எனது கணவர் ராபர்ட் வதோராவை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனது தாயார் இங்கு பிறக்கவில்லை. ஆனால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
இது நமது நாட்டுடைய அழகு. சோனியா காந்திக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டாம். உங்களுடைய குழந்தைகள் மற்றும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் இந்த நாட்டுக்காகவும் வாக்களியுங்கள்.
இவ்வாறு பிரியங்கா பேசினார்.
பிரியங்காவின் கணவர் ராபர் வதேரா, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி தொழில்நிறுவனங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்தார் என்று வதேரா மீது குற்றம்சாட்டப்பட்டு அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications