கங்கை கரையில் தூர்வாரி சுத்தப்படுத்தினார் பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: நாட்டின் அதிநவீன நகரங்களில் ஒன்றாக காசி மாற்றப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது லோக்சபா தொகுதியான வாரணாசிக்கு நேற்று வருகை தந்திருந்தார். இன்று அவர் மீண்டும் வாரணாசி வந்து கங்கையை சுத்தப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்தார். மண்வெட்டியை எடுத்து கங்கை கரையை தூர்வார அதை பிற தன்னார்வலர்கள் எடுத்துச் சென்று வேறு இடத்தில் கொட்டினர். இதன்பிறகு மோடி கங்கைக்கு சிறப்பு பூஜைகளும் செய்து நாடு செழிக்க பிரார்த்தனை செய்தார்.

Narendra Modi cleans Assi Ghat in Varanasi

மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கற்பதற்கும் பக்தி சுற்றுலாவுக்குமான தலைநகரமாக வாரணாசி நகரம் மாறவுள்ளது. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த உலத்தரம் வாய்ந்த வசதிகள் இந்த நகரத்தில் ஏற்படுத்தப்படும்.

மேலும், கண்ணுக்கினிய வகையில் கங்கை கரையின் ஓரத்தில் விளக்குகள் அமைக்கப்படும். அதேவேளையில், இந்த நகரத்தில் உள்ள மின்சார வயர்கள் அகற்றப்படும். பஞ்சகாஷி யாத்திர பாதையின் சாலைகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு தெருவிளக்குகள் முகாம்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்படும்.

எனது ஆறு மாத ஆட்சி காலத்தில், ஏன் இந்த நாடு இந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து ஆச்சர்யப்பட்டேன். இந்தியா அனைத்து திறன்கள் மற்றும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆனால் நாம் எதையுமே சாதிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் கங்கையை சுத்தப்படுத்தும் பணியில் இணையுமாறு உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு மோடி வேண்டுகோள் விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+