''அரசியல் வாரிசும் வேண்டாம் மதவாதியும் வேண்டாம் தலையில் மப்ளர் கட்டினா ஓகே''
டெல்லி: ஒருவர் மதவாதி, இன்னொருவர் அரசியல் வாரிசு. இதுதான் ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடி குறித்து டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய வர்ணனை ஆகும். இந்தக் காரணத்திற்காகத்தான் இவர்கள் இருவரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் இவர் விளக்கம் தருகிறார்.
இக்காரணங்களுக்காகதான் "கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டிய அரசியல்வாதிகள்" பட்டியலில் இவர்களையும் சேர்த்திருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறுகிறார்.

அரசியலில் இதெல்லாம் சகஜம்:
என்டிடிவி தொலைக்காட்சிக்கு அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், "ஒருவர் அரசியல் வாரிசாக இருக்கிறார். இன்னொருவர் மதவாதியாக இருக்கிறார்" என்றார் கெஜ்ரிவால்.

கட்சிப்பட்டியலின் கதை:
மேலும் அவர் கூறுகையில், " எங்களது கட்சி வெளியிட்ட தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் நான்கு காரணிகளுக்காக அதில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒன்று ஊழல், இன்னொன்று குற்றவாளிகள், 3வது மதவாதம், நான்காவது அரசியல் வாரிசு" என்றார்.

தலைவர்கள் பட்டியல்:
டெல்லியில் சில வாரங்களுக்கு முன்புதான் ஒரு பெரிய தலைவர்கள் பட்டியலை வெளியி்ட்டது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி என்பது நினைவிருக்கிறதல்லவா...

எதிர்க்கும் காங்கிரஸ்:
இதில் ராகுல் காந்தி பெயர் சேர்க்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் இப்படி ஒரு விளக்கம் அளித்துள்ளார் கெஜ்ரிவால்.

நமட்டு சிரிப்பா,நமத்து போகபோகும் சிரிப்பா:
நரேந்திர மோடிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவீர்களா என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கெஜ்ரிவால் சிரித்தபடி பதிலளிக்கையில், " மோடி லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறாரா? இது ஊகமான கேள்வி, பதிலளிக்க முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications