Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முல்லை பெரியாறு அணை திறப்பு... 350 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..!

Subscribe to Oneindia Tamil

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை இன்று காலை திறக்கப்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கக்கூடிய முல்லை பெரியாறு அணையில், நீர்மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. இதற்கு காரணம் கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை தான் காரணம்.

Opening of Mullaperiyar Dam, 350 families evacuated

இதனிடையே முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளது. முல்லை பெரியாறு அணை வெள்ளிக்கிழமை திறக்கப்படும் என கேரள அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி காலை 7 மணிக்கெல்லாம் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் மற்றும் கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் முல்லை பெரியாறு அணைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அணையை திறப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். அணை திறக்கப்படுவதற்கு முன்னர் முதல் எச்சரிக்கை சங்கு காலை 7 மணிக்கும், இரண்டாவது எச்சரிக்கை சங்கு 7.15-க்கும், மூன்றாவது எச்சரிக்கை சங்கு 7.24-க்கும் ஒலிக்கவிடப்பட்டது.

முல்லை பெரியாறு அணையை திறப்பதற்கு முன்னதாக 350 குடும்பங்களை சேர்ந்த 1,079 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதே போல் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 4,194 கன அடியாக உள்ளதால், பாதுகாப்பு கருதி அணையின் பின்புற மதகுகள் வழியாக விநாடிக்கு 2 ஆயிரத்து 344 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் வல்லக்கடவு வழியாக இடுக்கு அணைக்கு சென்றடையவுள்ளது. இதனிடையே தமிழக நீர்வளத்துறை சார்பில், முல்லை பெரியாறு அணையின் இரு வழிந்தோடி மதகுகள் மூலம் விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் மத்திய நீர்வளக் குழுமம் அளித்த மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணையை பின்பற்றியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் அணையை தமிழக நீர்வளத்துறை கவனமாக இயக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து கேரளாவில் பல்வேறு வதந்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+