இரட்டை இலை: தீயா வேலை செய்யும் ஓபிஎஸ் கோஷ்டி.. தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!
இரட்டைஇலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் கோஷ்டி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் கோஷ்டி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. 12,600 பக்கங்களை கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு இரட்டை இலைச்சின்னத்தை பெற அக்கட்சியின் இரு கோஷ்டிகளும் போட்டி போட்டன. தங்களுக்குதான் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் இரு தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்தன.
ஓ.பி.எஸ்., தரப்பில் 20 ஆயிரம் பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் ஆர்கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஆவணங்களை சரிபார்க்க நேரமில்லை எனக்கூறி இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். இந்நிலையில், இரட்டைஇலை சின்னம் தொடர்பாக 12,600 பக்க ஆவணங்களை கூடுதலாக ஓ.பி.எஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர்.