மகனின் கிரிக்கெட் பெட்டிங் பெற்றோரின் உயிரை பறித்தது.. இந்தியா தோற்றதால் தற்கொலை!
குண்டூர்: உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் முரிக்கிபுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிபாபு (58). இவரது மனைவி பெயர் நாகேந்திரம் (55). இத்தம்பதியின் ஒரே மகன் ஸ்ரீஹரி கிரிக்கெட் ரசிகர். ஒவ்வொரு முறை கிரிக்கெட் போட்டி நடக்கும் போது, கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாம். பெற்றோர் கண்டிப்பையும் மீறி இதனை அவர் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா ஜெயிக்கும் என அவர் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியுள்ளார். ஆனால், நேற்றைய அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
இதனால், ஸ்ரீஹரியை விட அவரது பெற்றோர் பெரும் சோகத்திற்கு ஆளானார்கள். மகன் தலைமறைவாகி விட்டால், சூதாட்டத்திற்காக அவர் கடன் வாங்கிய இடங்களில் நாம் தான் பதில் சொல்ல வேண்டும் என அவர்கள் பயந்தனர். எனவே, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
நோய் காரணமாக தனது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய ஸ்ரீஹரி, உடனடியாக அவர்களது சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதற்குள்ளாக அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீஹரியைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications