டெல்லி ஐஐடி வளாகத்தில் பி.எச்.டி இறுதியாண்டு மாணவர் மர்ம மரணம்
டெல்லி ஐஐடி வளாகத்தில் உயிரிழந்த நிலையில் மாணவர் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி ஐஐடி வளாகத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் மாணவர் ஒருவர் மர்ம மரணமடைந்தார். உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள ஐஐடி பொறியியல் படிப்பிற்கு புகழ் பெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஐஐடி வளாகத்தில் உள்ள நாளந்தா விடுதியில் மாணவர் ஒருவர் மரணமடைந்தார். உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர் இறுதியாண்டு பி.எச்.டி படித்து வரும் மாணவர் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. இது தற்கொலையாக அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஐஐடி வளாகத்தில் இறந்த நிலையில் மாணவர் உடல் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications