மோடி அமைச்சரவை விரைவில் மாற்றம்..- நஜ்மா ஹெப்துல்லா நீக்கம்; மெகபூபா முப்திக்கும் இடம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஏப்ரல் 8ம் தேதியன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்த செய்தியில், " கடந்த ஆண்டு பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற போது அவருடன் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் முதன்முறையாக கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதில் முன்னாள் கோவா மாநில முதல்வரான மனோகர் பாரி்க்கர் மற்றும் சுரேஷ்பிரபு ஆகியோர் ராணுவம் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் வரும் 8ம் தேதி மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய விரிவாக்கத்தின் போது காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெகபூபா முப்தி மற்றும் சிவ சேனா கட்சியை சேர்ந்த முக்கியதலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற எம்.பியுமான அனில் தேசாய் ஆகியோர்களுக்கு கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் அமைச்சராக உள்ள நஜ்மா ஹெப்துல்லா நீக்கப்படுவார் என்றும் தெரிகிறது.